CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் - 1. நாக்குச் செவந்தவரே...

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

 வணக்கம் நண்பர்களே...

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "நாட்படு தேறல்" என்ற தலைப்பின் கீழ் 100 பாடல்கள் எழுதி தனது தயாரிப்பின் கீழ் வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். 


அத்திட்டத்தின் மூலம் 100 பாடல்களை 100 இசையமைப்பாளர்கள் இசையமைத்து, 100 பாடகர்கள் பாடி, 100 இயக்குநர்கள் இயக்க இருக்கிறார்கள். இந்த நூறு பாடல்களும், வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்களாக இருக்கும் என கவிப்பேரரசு தெரிவித்துள்ளார்.


"நாட்படு தேறல்"  தலைப்பில் கவிப்பேரரசு எழுதி முதல் பாடலாக "நாக்குச் செவந்தவரே" என ஆரம்பிக்கும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு வாகு மசன் என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைத்து அவரே பாடியும்  ,நடித்தும் உள்ளார். இப்பாடலை இயக்கியதும் ஒரு பெண் இயக்குனரே. அவர் "வட சென்னை" என்ற படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி ஆவார்.

காதலித்துக் கைவிட்டவனைக் காதலி கேட்கும் கேள்விகள் என Rock-Folk முறையில் உருவாகியுள்ள இப்பாடலில், காதலர்களின் நெருக்கத்தையும், காதலின் ஆழத்தையும், மிக இயல்பாக காட்சியமைப்பின் மூலம் படைத்துள்ளார்கள். 

வைக்கப் போர்ப் படப்புக்கு
வடஇருட்டு மூலையில
அக்கப்போர் செஞ்சகதை
அய்யனுக்கு மறந்திருச்சோ?


ஆண்களின் குணத்தையும் இப்பாடல் வரிகளில் நக்கலாக அதே சமயம் பெண்ணின் ஏக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் கவிப்பேரரசு. 

ஆறுசரம் சங்கிலியோ
அட்டிகையோ கேக்கலையே
மஞ்சக் கயித்துக்கு
மனசுக்குள்ள அரிக்குதய்யா

ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம்
புதைகாடு போறவரைக்கும்

பாடலின் காட்சியமைப்புகள் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இப்பாடல் முழுவதும் Iஐபோன் மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று. லாங் ஷாட் ஆங்கிள், டாப் ஆங்கிள், என ஐபோன் மூலம் சிறப்பாக பாடலை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.




கவிப்பேரரசு அவர்களின் தமிழ் கொஞ்சும் வரிகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்தப் பாடல் அவரது யூடுப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Images & details courtesy: Vairamuthu Official


4 கருத்துரைகள்:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... Best Blogger Tips

அருமையான பாடல், மருதத்திணை!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ் சகோ.
மீண்டும் வலைத்தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

madigansabia said... Best Blogger Tips

Gambling in Las Vegas and the future of entertainment - Dr.
The Gambling Council says the 경주 출장마사지 casino is a serious 의왕 출장안마 business for 울산광역 출장샵 the people who love to gamble. There are casino 여주 출장안마 buffets around the world, but 속초 출장마사지 the

Nanjil Siva said... Best Blogger Tips

நீங்கள் கொடுத்துள்ள "யூ டியூப்" இணைப்பின்மூலம் சென்று பாடலை பார்வையிட்டேன்... சும்மா சொல்லக்கூடாது பாடல் மிக அருமையாகவே வந்துள்ளது. "அனுபவம் தந்த மாமாருந்தை" அப்படியே பாடலில் தெளித்துள்ளார். நன்றி!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1